கிழியும் மனங்கள்!

என் மனிதனே,

எங்கே செல்கிறோம் இவ்வுயிர் கொண்டு,

எதற்கென்று தோன்றாத எழுத்தறிவு கொண்டு!

படுக்கவும், படிக்கவும், கெடுக்கவும், பேசவும்,

உணரவும், புணரவும், எழுதவும், கற்கவா வாழ்க்கை?!

 

https://i0.wp.com/www.cityofmerced.org/images/Departments/PublicWorks/Tax_Services/trees-web.jpg

மரங்கள்கூட நிழல் கொண்டு,

மனிதன் நித்தமும் வஞ்சு கொண்டு!

மனிதநேயம், மண்ணாய் கிடக்கிறது குப்பைமேட்டில்!

இடையே வந்துவிட்டதாய்,
இனப்பற்றும், மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும்!

“இனம் கண்டும் காணாமல் குருதியால் குணரப்பட்டு,

இறுதியை நோக்கி இனப்பற்று!

மொத்தமாய் கலப்படத்தின் முழுவடிவம் கொண்டு,

முழுவேக பரிணாமத்தில் மொழிப்பற்று!

நாட்களில் ஒருநாள் நான்கினிப்புடனும் ஒட்டுக்கொடியுடனும்

நெஞ்சிலே குத்திக்கிழிக்கப்படுகிறது நாட்டுப்பற்று!”

https://atthoa.bay.livefilestore.com/y1msRylGT0tTQCIZGFEfaxlozxZXf98gmBR_gIt4usf6i7nJIkt5cCQPN6TTh7gd92OwqUM3sKRdZsnM03rd_a98oBJ4CNoV3nZLbtFBum-0CqZ_1s8YWyLGP5B6Evea_ARlXVIlQsfypDn9xO_EAl58Q/indian_flag%5B4%5D.jpg

பற்றேன்றேதுவும் வேண்டாம்.

இனியாரும் பற்றி எறியவும் வேண்டாம்!

நேயம் கொள். மனிதநேயம் கொள்!

மனிதனாய் பிறந்ததால் நேயம் கொள்!

இனியேனும் குருதியின் பாய்ச்சல்,

பசியாற்றவாய் மட்டுமிருக்கட்டும்!

பகையென்ற சொல்லை கொன்று நீ,

இனி மனிதனாய் இல்லையெனும் மரங்களாய் வாழ்.

உன் மனதினை கொல்லாமல்!

https://i0.wp.com/www.seamusmoran.com/images/The-tree-they-used-to-kill-.jpg

பேருந்துப் பயணங்களில்..!

நீங்காத நினைவுகளாய்,

நீண்டு கொண்டே செல்கின்றன..!

https://i0.wp.com/www.knox-lincoln.org/photogallery/spring%20green%20road.JPG

கொஞ்சமாய்  ஊனம்  கொண்டு

ஒருபுறமாய் சாய்ந்தொடும் பேருந்து,


கிராமப்புற பயணங்களில் நிறைந்திருக்கும்

என்றுமான இரட்டை அர்த்த வசனங்கள்,


ஒதுங்காமல் நிற்கும்

ஊர் பெரியவரின் எருமை மாடுகள்,


பட்டும் படாமல் உரசிக்கொள்ளும்

பள்ளி இளசுகளின் காதல் மொழிகள்,


கருவறையின் முதல் வாசனையாய்

பேருந்தில் ஒட்டியிருக்கும் கருவாட்டு வாசனை,


ஒரு விழுதலில் ஒட்டுமொத்தமாய் திரும்பச்செய்யும்

ஒற்றை ரூபாய் நாணயம்,


நடத்துனராக மாறிவிடும்

படிப்பயண விடலைகளின் சப்தங்கள்,


நடத்துனருடன் நகை செய்யும்

பெருசுகளின் குசும்புகள்,


ஏதாவதொரு பொழுதில் கிடைக்கும்

தேவதைகளின் கண்பார்வைகள்,


எதோ ஒரு வானொலியின் இடையிடையே

வந்துபோகும் கை தாளங்கள்,


இயற்கையாய் இருமும்

ஜன்னலோர தென்றல்,

https://i0.wp.com/blog.dpphoto.ca/wordpress/wp-content/uploads/2007/11/bus-5015.jpg

அனுபவிக்க நேரமில்லா

ஏக்கமிகு கனவுகளாய்,


எப்பொழுதாவது கிடைக்கும்

இயற்கையான பயணமாய்,


நீண்டு கொண்டே செல்கின்றன

இவையனைத்தும்..!

இறு(ற)க்கம்!


எப்பொழுதும் அப்படித்தான்.

நினைவுகளை ஒன்று சேர்த்து

நீண்ட நேரம் லைத்தும் இருப்போம்!,

நேராய் பார்த்தும்,

பார்வைகள் ஒன்றே காரணமாய்

நீங்கியும் செல்வோம்.


இன்று போனதுமட்டும் அப்படியில்லை.

நீங்கிச் சென்ற நிமிடங்கள்

நீங்காமல் நீண்டுகொண்டே செல்கிறது!

ஏன் இந்த நெருடல்?


உனக்கேதுமிருக்க வாய்ப்பில்லை!

ஒவ்வொரு முறையும் மண்டியிடுவது நான்தானே!



கொஞ்சமாயில்லை.

கொஞ்சம் நிறையவே யோசிக்கிறேன்.

யாசிக்கவும்

பாத்திரம் இருந்தால்தானே பண்பாடு!


என்னதான் தவறு செய்தேன்?

சின்னதாய் உன் விரல் தொட்டேன்!

சத்யமான தவறானால்

சாஷ்டங்கமாய் சரணடையவும் தயார்!


இல்லை.. இடையிடையே திரும்பி

திருமுகம் பார்க்காவிட்ட வகுப்புகளின் வஞ்சனையா?

என்றும்போல் இன்றும் அடம் பிடிக்கிறாய்!

இன்னதென சொல்லாமல்!


என் நண்பனிடம் பேசி,

என்னிடம் பேசாத ஒவ்வொரு திரும்பல்களும்

என்னையே நான்

ஆயிரம் முறை திரும்பிப் பார்க்க செய்கின்றன!


கொஞ்சமாய் பேசத்தான் நினைக்கிறேன்!

என்னையும் மிஞ்சி ஏதேதோ பேசிவிடுகிறேன்!

என்றும்போலான இன்றும் கோவமா?

இருக்க வாய்ப்பில்லை!


நான் யாருடனும் பேசாத வார்த்தைகளால்,

என்னை எனக்கே நட்ப்பாக்கிவிட்டாய்

இன்று மட்டும்!


இதயத்தின் இரத்தமும்,

இரு கண்களில் இடரும்வரை யோசித்துவிட்டேன்!

இனியும் யோசிக்க என்னிடம் எதுவுமில்லை.

“என்னை நான் பைத்தியமாய்” தவிர!



கொஞ்சமாய் இறக்கம் காட்டு!

இல்லை, இறக்கத்தான் வழிகாட்டு!

என்னால் ‘ஒரு நாள் பிணமாய்’,

ஒவ்வொருநாளும் வழமுடியாதே!