பூஜை என்றான், புணஷ்காரமென்றான்.
எங்கெங்கோ கைவைத்த குருக்கள்
எத்தனைபேருக்கு அளித்தானோ
அந்த கிடைக்கரிய பிரசாதத்தை!
வெளியில் கையேந்தும்
வெகுளிகள் பல இருக்க,
கைபட்டால் தீட்டென்று
அடிதூரம் ஓடும்
ஆன்மீகவாதி,
அம்மணப்பிரசாதம் உண்டிருப்பான்!
குடுமையும், நெற்றிக் குங்குமமும்
குருக்களின் அவதாரம்.
அடியோடு அம்பலத்தில்
அவனின் அரிதாரம்.
கைபடும் குற்றமாய்
ஈழனைப் பார்த்தவன்,
ஒரு எச்சத்தின் அருவெருப்பாய்
ஈழனால் பார்க்கப் படுகிறான்
என்னூர் தெருக்களில்.
ஹா ஹா ஹா. உலகம் சுழலும்.