கடைசி பதிப்பில்.. ஒரு மாநிலத்தின் பொறுப்புகள் மிகுந்த ஒரு அரசியல்வாதியை சந்தித்த நாம்.. மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களை சந்தித்தோம்.. அதன் பதிவுகளை மிக விரைவில் அளிக்கிறேன்..
அதன்முன்பு ஒரு சின்ன தேடல். உலகிலுள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளிகள். இதில் யாருடைய வாழ்வாதாரம் போதுமான அளவு உள்ளது?
என் தேடலில் சிக்கிய தீர்வுகள் இவையே..
ஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது
கடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜிலும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல!
கடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும். இதை பறைசாற்றவே இந்த என் எழுத்துக்கள்!
கடவுளை நோக்கிய வேண்டுதல்கள் / நம்பிக்கைகள்.. ஒரு ஆதாரபூர்வமான சோதனை!
கடவுள் நம்பிக்கையை தோண்டி துருவ, முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது பிரான்சிஸ் கல்தோன். இவர் டார்வினின் சகோதராக இருக்கலாம் என கருதப்படுபவர். ( அது குடும்ப பிரச்னை, நம்ம பிரச்சனைக்கு வரலாம்.)
2006-ம் ஆண்டு பகுத்தரிவாளிகளின் சோதனையை ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. “Study of the therapeutic effects of intercessory prayer (STEP) . நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள டேம்ப்லேடன் Foundation. இதற்காக செலவிடப்பட்ட காசு 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்!
இதில் மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களாம்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே.
நோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும்.
மூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.
சில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் ஆச்சர்யதக்க விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ!? ஒரு ஆராய்ச்சியாளர், ‘பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ’ என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.
கேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித காரண காரியங்கள் கடவுள் என்றொரு நம்பிக்கைக்காய் தரப்பட்டன.
கடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் இல்லையா? அதனால்தான் இதில் அவர் கருணைகாட்டவும் இல்லை. என்ற கூற்றுகளும் எழவே செய்ததாம்.
சரி மீண்டும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை இங்கே எழுப்புவோம். ( இந்தக் கேள்வி மூட நம்பிக்கையை களையவே ஆகும். எப்பொழுதும் மதங்களையோ, கடவுள்களையோ கிண்டல் செய்ய அல்ல.)
அறிவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது,
1.தொட்டுணரும் பொருள்,
2.உணர்தலால் உணரும் பொருள்.
ஆகிய இரண்டு விஷயங்கலாலனது. உடனே கடவுளை உணர்தலால் உணரும் பொருளாய் அடைக்க முர்ப்படக்கூடது.
பொதுவாக தொட்டுணரும் பொருள் என்பது கல், கண்ணாடி, கட்டை, நான், நீங்கள் ( கையால் தொட்டு உணரக்கூடியவை) இவைகளை ஆதாரமாகப் அறிவியல் தனிமங்கள் ( கார்பன், துத்தநாகம், பொட்டாசியம்.). இன்னும பதம் பிரித்துப் பார்த்தால் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள. இந்த ட்ரான்களை இன்னும் நுட்பமாக ஆராய்ந்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள்,லெப்டான்கள் என்று வகுத்திருக்கிறார்கள்.
சரி உணர்தலால் உணரும் பொருள்? காற்று, புவி ஈர்ப்புவிசை, வலி இவற்றை போன்றது.
உணர்தலால் உணரும் பொருளில் கடவுளை அடைக்க நாம் முற்ப்பட்டால், இந்த இரண்டாம் குறியிட்ட உணர்தலால் உணரும் பொருள், தொட்டுணரும் பொருளால் வரையறுக்கப்படுகிறது. அதாவது அதுவும் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள ஆகியவற்றால் கட்டுட்டண்டவையாகவோ அல்லது ஏற்ப்படுத்தக்கூடியவையாகவோ இருக்கிறது. கடவுளை இப்படி உணர்தலால் உணரும் பொருளில் அடிக்கும்போது, கடவுள் என்ற நம்பிக்கையானது ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள ஆகியவற்றின் சொல் பேச்சின்படி நடப்பதாக வரையருக்கப்பட்டுவிடுகிறது
ஆனால் எந்த மத, இன கோட்ப்படுகளோ, நம்பிக்கைகளோ.. கடவுள் என்ற நம்பிக்கை பொருளானது இன்னொன்றை சார்ந்து இருப்பதாக கூறுவதுமில்லை.. கூறவும் செய்யாது. கடவுள்கள் அறிவியலை பொருத்தமட்டில் ஒரு நம்பிக்கையே.. அந்த நம்பிக்கையை, நம்பிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்காக உங்கள் வாழ்வையும், உங்கள் உடலையும் மெனக்கெட செய்வது, சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள் என உயிர்த்துளி கொடுத்து ஈட்டிய பொருளை எங்கோ எறிவது போன்றது விமர்சிக்கமுடியாத முட்டால்தனகள் ஆகும்!
சிந்தியுங்கள்! இனி வருவார்கள் ஆத்திகப் போர்வையில் மூட நம்பிக்கை புலிகள்!
கடவுள் நம்பிக்கை = நம்பிக்கையே கடவுள்
சிறப்பான கட்டுரையை அளித்த சகோதரர் மறவனை வாழ்த்துகிறேன்.
புள்ளி விவரங்களை சுட்டி காட்டியுள்ளார் .
தான் சொல் வந்ததை தெளிவாகவும் , அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார்.
பாராட்டுகிறேன்.
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரர் சுந்தர் அவர்களே!