


ஒவ்வொரு சகோதர, சகோதரிகளிடமும் நாம் அதே ஐந்து கேள்விகளை கேட்கலானோம். பதில்கள் கொஞ்சம் புயலாவும், சிலரிடம் அதுவே தென்றலாகவும், சிலரிடம் இரண்டும் கலந்தபடியும் வெளிப்பட்டன.
அடுத்தபதிப்பில் ( இந்த பதிப்பில்) ஆன்மீக போர்வையிலுள்ள முட்டாள்களை மட்டுமே விமர்சிக்க வேண்டுமா? பகுத்தறிவாளி போர்வையில் வெறியர்களை ஏன் விமர்சிக்கக்கூடாது, என்ற கேள்வி எழவே, இங்கு பகுத்தறிவல சிங்கங்களும் சிக்குகிறார்கள்.
இதனை இங்கே சொல்ல கடமைப் பட்டுள்ளேன். சென்றமுறை நாம் எழுதிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பற்றிய பதிப்பு அவரை என்னை அழைத்து பேச வைத்தது. அவர் பேசியதில் குறிப்பிட வேண்டுமாய் நான் விரும்புவது இதுதான்.
” மறவன். நீங்க எதோ வீட்டு பக்கமா வந்ததால சும்மா வலைதளத்தில் போட பேட்டி எடுக்க வந்திங்கன்னு நெனச்சேன். படிச்சுட்டு என்ன பேசறதுன்னு தெரில. என்ன நல்லாவே உன்னிச்சு கவனிச்சு எழுதிருக்கிங்க. சில தவறுகள் புரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா, ரொம்ப காலம் என்னோட இருக்குற நம்பிக்கை ஆச்சே. அதான் கடவுள் நம்பிக்கையை விட முடில. நீங்க சொன்ன வீட்டு முன்னாடி இருந்த கரி மிளகாய் கயிறு எல்லாம் எடுத்துட்டேன். பரவ இல்ல. நல்லாவே உங்க வேலைய பக்குரிங்க. நீங்க செஞ்ச ஒரே நல்ல காரியம் என் பேரை போடல. அதுவரைக்கும் சந்தோசம்.”
சரி. அவர் பேசி முடிக்கும் வரை நான் சும்மாவா இருந்திருக்க முடியும்.. ஆறேழு மன்னிசுடுங்கவையும் ( தவறா எழுதியிருந்தா.) ரெண்டு மூணு நன்றியையும் போட்டு வச்சேன். ( என்ன பண்ண கொஞ்சம் பெரிய ஆள் ஆச்சே!)
ஐயா, நீங்க இந்த பதிவ படிச்சாலும் ஒன்னு சொல்லிடறேன். நான் எழுத உக்காந்த கொஞ்சம் எல்லை மீறி போவேன். எனக்கு அது பிடிக்கும். எழுத்தளர்களுக்கு ( ஹா ஹா ஹா ) பிடிச்ச குணம் இல்லையா!
நமது போட்டியாளர்களை ( மன்னிக்கவும் பேட்டியாளர்களை) இந்த ஒருபதிப்புக்குள் அடக்க முடியவில்லை. ஆதலால், கொஞ்சம் கடினவயப்பட்டாலும் அவர்களின் மனதின் எண்ணங்களைமட்டும் பதிவாக விளக்கத் தொடங்குகிறேன்.
ஆன்மீக புலிகள்:
குறிப்பாக நாம் பேட்டிகண்ட மனிதர்களை ஏற்க்கனவே சொன்னதைப் போல் மூன்று வகையாக பிரிக்கலானோம்.
2. நடு நிலை வசதி பெற்றவர்கள்.
3. வசதிகளில் உயர்ந்தவர்கள்.
அடுத்து, வசதிகளில் உயர்ந்தவர்களின் கடவுள். இவர் அதிகபட்சமாக என்றுமே பணக்காராக மட்டுமே இருக்கிறார்! அவருக்கு மூன்று நேரங்கள் உடை அலங்காரம், அணிகலன்கள், அபிஷேகங்கள், அடிபணிவுகள் என்று அனைத்தும் பெற்றுத்தரப்படுகின்றன. அவர்களின் கடவுள் முக்கிய மனிதர்கள் வழிபாட்டுக்குள் (VIP Dharsan) அடங்கிவிடுங்கின்றன. விக்ரகத்தின் கருவறைக்குள்ளேயே மனிதர்களுக்கு மரியாதைகள் வழங்கப்பட்டுவிடுகின்றன. ஏறத்தாழ இருவரும் ஒரே ஜாதி. பணக்கார ஜாதி என்று சொல்லுமளவுக்கு அவர்கள் நண்பர்களாக மாறிவிடுகிறார்கள்.
வேண்டுதல்களை பொறுத்தவரை, அதிக மும்மூச்சு வழிபாடுகளோ அல்லது உடலை வருத்திக்கொள்ளும் வழிபாடுகளோ இவர்களுடன் கொஞ்சி குலாவுவது இல்லை!
சரி நடு நிலை வசதி பெற்றவர்கள்? அவர்களின் கடவுள் நடுநிலையாகவே இருக்கிறார்! கடவுளானவர் வணக்கம் சொன்னால் திருப்பி வணக்கம் மட்டுமே சொல்லும் குனமுடையவாரக இருக்கின்றனர். அதிகமாக கோவில்களுக்கென மெனக்கெடுவதில்லை என்றாலும், வழிபாடு, வேண்டுதல்களில் தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள்.
1. பணக்கரகளின் கடவுள், பணக்காரராக மட்டுமும்,
2. நடுத்தரவர்க்கத்தின் கடவுள் ஏனோதானோ என்றும் அதே நேரம் வேண்டுதல்களில் மிக உடன்பாடு கொண்டவர்களாகவும்,
3. ஏழைகளின் கடவுள் எந்த வசதியிலும் வாழக்கூடிய முரட்டுத்தனமான கடவுளாகவும் இருக்கிறார் என்பது முடிவு.
சரி. ஆன்மீகவாதிகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
இப்படியொரு கேள்விக்குமான பதில் எனக்கு கிடைக்கலாயிற்று. ஆன்மீகவாதிகள் என்பவர்கள் அதிகமாக மனஅமைதியை நாடுபவர்களாகவும், தன்னம்பிக்கையற்றவர்களாகவும், சுற்றங்களை அதிகமாக நம்பதவர்களாகவும், உதவிகள் செய்யும் குணமுடையவர்களாகவும், தன்னைசுற்றி என்றும் ஏதோ பாதுகாப்பு வேண்டும் பயப்படுபவர்களாகவும், உண்மைக்கு அப்பாற்ப்பட்ட கற்பனை விஷயங்களில் நாட்டம் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்களின் உலகம் ஒரு மாய உலகமாக இருக்கிறது.
இவர்களை பொறுத்தவரை நோக்கம் இதுதான். ஆன்மிகம் மட்டுமே ஒரு மனிதனுக்கு அமைதியான வாழ்வை தரமுடியும் என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உண்மையில் அளவு தெரியாமலேயே நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். கடவுள் என்ற நடைமுறை அனுபவம் இல்லாத ஒன்றை அப்படியே ஈற்றுக்கொள்ள வேண்டும்.
இங்கே சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்களை விட, அதனை எதிர்ப்பவர்களின் கை என்றுமே சற்று ஓங்கி இருக்க வாய்ப்புண்டு. அந்த ஆதரிக்கும் விடயத்தில் சரியான, தீர்க்கமான முடிவுகளோ, வரை முறைகளோ இல்லை என்றாலும் அதனை ஆதரிக்க ( அது எதுவாக இருந்தாலும்) ஒரு கூட்டம் என்றும் இருக்கத்தான் செய்யும். அப்படிப்பட்ட கூட்டத்தை ( அதன் கருத்துக்கள் சரியாக இருந்தாலும் கூட) எதிர்க்கும் கூட்டமும் மெல்ல மெல்ல ஒன்று உண்டாகும். இது தனித்தனி மனிதர்களின் அடிமனத்தின் உந்துதல்களால் ஏற்ப்படும் சாதாரண விளைவு.
இதன் இடைப்பட்டபுள்ளியில் நின்று சிந்தித்தால், ஒரு ஆதாரமில்லாத, வரைமுறைக்கு உட்படாத ஒன்றை வெறித்தனமாக ஈர்ப்பெடுத்துக்கொள்ளும்போது, அதனை சிந்திக்கும் மனநிலை, எண்ணங்கள், அது தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய சாதாரண அறிவுகூட நம்மைவிட்டு விலகி செல்ல ஆரம்பிக்கின்றது.
அதுபோல்தான், கடவுள் என்ற ஒரு நம்பிக்கைக்காய், என்ற ஒரு மாயைக்காய், என்ற ஒரு மூட நம்பிக்கைக்காய் ( உட்ப்புகுந்து யோசித்தால் அர்த்தம் புரியும்.)
தன்னால் யோசிக்கமுடியாத, செய்ய தேவை இல்லாத, முட்டாள்களாய் சில விசயங்களை செய்வது. ( எ.கா: மீண்டும் கூறுவது இதுதான். தன்னால் வேர்வை சிந்தி அடைந்த செல்வங்களை, உருப்படி உணவு சில நேரம்கூட இல்லதவன் ஆயிரக்கணக்கில் செலவு செய்து அழைத்துவரப்படும் ஊர்தேரின்மேல் வீசுவது…) இதனைஆட்சேபனை தெரிவித்து புரிய வைக்க வேண்டிய காட்டயத்தில் உள்ளவர்கள், இங்கே பகுத்தறிவாளர்கள் என எண்ணலாம்.
அதைவிடுத்து பகுத்தறிவாளர் போர்வையில், ஆன்மீகத்தின் மூடநம்பிக்கை பிரிவிலிருந்து தனியே சிக்கும் சிலரை, மனதை புண்படுத்தும் நோக்கில், சொல்ல வந்த கருத்துக்களை புரிய வைப்பதை தவிர்த்து, அதனை கையாளும் விதம் தெரியாமல், அவர்களை பகுத்தறிவு என்றால், அசிங்கமான ஒன்றென்று எண்ணவைக்கும் வகையில் அதற்க்கான உதாரணங்கள் தருவது ( சிவ லிங்கம்), தன்னை பெரிய பகுத்தறிவாளி என்று காட்டிக்கொள்ள ( ____ தாசன்) பெயர்கள் வைத்துக்கொள்வது, பகுத்தறிவை தெளிந்துகொள்ளவந்த சிலரையும் குழப்பிவிடுவது போன்றவை பகுத்தறிவாள சிங்கங்கள் செய்யும் வேலைகள்.
அதுமட்டுமில்லாமல், பகுத்தறிவை ஒரு பாடமாக கற்ப்பிக்க விளைவதை மறுத்து, பகுத்தறிவுக்கு சம்மந்தமே இல்லாத முட்டாள்தனமான முரட்டு வேலைகளை கையாள்வது போன்றதும் பகுத்தறிவாள சிங்கங்கள் செய்யும் வேலைகள்தான்.
பொதுவாக பகுத்தறிவை பக்ககம் பக்கமாக கட்டுரை எழுதி நிரூபிக்க வேண்டிய அவசியங்கள் இல்லை. பகுத்தறிவு என்பது, ஒரு விடயத்தை ஆழ்ந்து யோசிப்பது. கைக்கு ஒரு கைப்பேசி வாங்க மணிக்கணக்காக பலமணிநேரம் யோசிக்கும் நம்மால், நம் வாழ்க்கைமுழுதும் பின்தொடரும் அந்த கடவுள் என்ற நம்பிக்கையை ஆராய ஒரு மணி நேரம்கூட எடுத்துக்கொள்ளதது வருத்தமளிக்கவே செய்கிறது.
இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல – இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews) சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; மதம் அதனை வரைந்திருக்கிறது. கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி!
சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது?
vanakam maravan. thanggal kuruvathai erkiren. kadavul endra kopil.. thanggalin paarvai miha ethaarthamaga amainthullathu. yosikkavum seikirathu. pala vitha ennangkalai kondulla makkaluku ithu poi sera vendum ena perithum ethirpaarkindren. thanggalin tedal pani thodaratttum… vaazthugal tholare.
I have all appreciation for Mr. Marvan. His thinking is in the right direction, his presentation is gentle and to the point!
Its my pleasure that i got commands from you Mr.Sundhar. Thnking you!