எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!
என்னுடல் வளர்க்க
உன்னுடல் இம்சித்தாய்..
அன்னையே !
ஈரைந்து மதங்கள்
என் கருவையே சுவாசித்தாய்..
உன் வம்சம் என்னையே
உலகுக்கு ஈன்றெடுததாய்..
வெளி சொல்இயலா வழியிலே
உன்னையே ஒப்புக்கொடுத்தாய்..
என் பிண்டம் வளரவே
உன் மார்பில் இடம் கொடுத்தாய்..
எத்தனை நாளாய் நீ
இரவும் பகலும் விழித்திருந்தாய்!
உன்கைகள் ஓடியவே
தொட்டிலதை தாலாட்டி,
உன் செவ்வாய் இதழ்வழிக்க
இராகங்கள் நீ பாடி,
எத்தனை கடமையிலும்
என்மீது கண்வைத்து,
ஏதேனும் அருந்தும்முன்
ஒருமுறை நீ சுவைத்து,
ஏதேனும் யாராலும்
இடித்தாலும் கடிந்தாலும்
என்கண்கள் நீர்வழிய
உன் தோல்கள் இடம்கொடுத்து..
என்றுமே எனக்காக
நீ இருந்தாய் என்அன்னையே!
என்முதல் தவரலில்
ஓடிவந்து கட்டி அனைத்து,
என்கால்கள் எட்டுவைக்க
உன்முத்தம் தொட்டுவைத்து,
என்வாய் மொழியுரைக்க
உன்வாய் உச்சிமுகர்ந்து,
எத்தனை சந்தோசம்
என்அன்னையே உன்முகமதனில்!
என்பள்ளிப்பாடமதில்
என்றுமே பின்னேற்றம்..
என்கல்லூரி நாட்களிலும்
ஏதோ ஒரு திண்டாட்டம்..
என் வாழ்வின் தொடக்கத்தில்
அன்றுமாய் கலியாட்டம்!
அத்தனைக்கும் புன்னகைத்து
எனக்கேதெரியாமல்
முழுதுமாய் தோல்கொடுத்து,
என் ஒவ்வொரு அணுவிலும்
கலந்த என்னுயிர் அன்னையே..
எப்படி மறப்பேன்
ஒருநொடியிலும் நின்னையே!!!
எனக்குத்தேவையில்லை தனியொரு தினம்!
