அதிகப் பணம் கொண்டு
அழித் துடிக்கும் மனம்கொண்டு
அங்கும் இங்கும் ஆடிப்பாடி,
அழகென்று முகம் கெடுத்து
ஆடை தனைக் கிழித்து
புத்துலகம் படைப்பென
முழுதுடல் நூல்மறைத்து
இருக்கும் இவை கொடுத்து
இவளே விலையாகி,
விலையாய் மதுவாங்கி
மதுவுடன் மாதுவாகி
மஞ்சம் பல கண்டு
பணிதனை இவள் நினைத்து
பிணிதனை உள்வாங்கி
புறம்செய் பழிவாங்கி
புண்பெயர் தான்வாங்கி
பத்தினிப் பெண்டீரின்
பாவம் பலவாங்கி
பசுமுகம் கருவறுத்து
சமூகக் கேடாகி
சான்றோர் பீடாகி
சம்பந்தம் கொண்டார்க்கும்
உறவினை உயிர்ப்போர்க்கும்
இருந்திட்ட இடைவெளிதனை
தீவடுவாய் புறையாக்கி
எரிகால நெருப்பில்
என் நவீனப் பெண்ணே,
இத்தூண்டேன்ற தூசியாகி
இமைக்கின்ற இப்பொழுதில்
காற்றோடு கலக்கும் மாயம் என்ன….!
(இக்கவிதையை, பண்பாட்டையும் மரபையும் , சமூக நலத்தின் பொக்கிஷமாக எடுத்துரைக்கும் என்னுயிர் தோழி தர்சினிக்கு சமர்ப்பிக்கின்றேன்.)